இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உலக அளவில் சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடக்கும் இந்த விழாவில் உலக நாடுகளில் இருந்து பல படங்கள் அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி படமான ‛செல்லோ ஷோ' தேர்வாகி உள்ளது.
பேன் நலின் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் 9வயது சிறுவனை மையமாக வைத்து உருவாகி உள்ளது. யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள இந்த படம் ஏற்கனவே சில சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுகிறது.
ஆஸ்கருக்கு அனுப்ப இந்தியாவின் பல மொழிகளில் இருந்து படங்கள் தேர்வாகின. குறிப்பாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், விவேக் அக்னி ஹோத்ரியின் காஷ்மீர் பைல்ஸ் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இறுதியில் ‛செல்லோ ஷோ' தேர்வானது.